தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால்மா, பம்பஸ், பிஸ்கட், குடிநீர் மற்றும் பாய் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு கல்விளானில் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று (02.12.2025)இரண்டாவது தடவையாக அவசரகால உதவித்திட்டம் நோர்வே வாழ் தமிழ் மக்களின் பங்களிப்பில் தமிழ்முரசம் வனொலியின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதநேய செயற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது.










