இது வலிசுமந்த வாரம் தமிழர்களாய் வடம் பிடிப்போம்!

You are currently viewing இது வலிசுமந்த வாரம் தமிழர்களாய்  வடம் பிடிப்போம்!

கடந்த மாவீரர்நாளன்று நோர்வே ஒஸ்லோவில் சினிமா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது மீண்டும் வலிசுமந்த வாரத்திலும் சினிமா திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவித்தல்கள் வந்துள்ளது,
தயவுசெய்து மாவீரர் வாரத்திலும், வலிசுமந்த வாரத்திலும் சினிமாத்திரைப்படங்களையோ களியாட்டங்களையோ ஏற்பாடு செய்யவேண்டாம் என்பதை உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம் எங்கள் இனத்தில் இப்படியான செயற்பாடுகள் நடைபெறுமானால் அது மடிந்த உறவுகளுக்கு நாம் செய்யும் துரோகம் அத்தோடு மட்டுமல்லாமல் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறக்கடிக்கப்பட்டு உரிமைக்கான குரல்கள் மழுங்கடிக்கப்படும் இந்த நிலையை தமிழர்களாகிய நாங்களே உருவாக்கக்கூடாது இக்காலப்பகுதியில் எமது இனத்தின் வலிகளும் அவர்களுக்கான நீதியின் குரல்களுமே வலுப்பெறவேண்டும் ஆதலால் தமிழராய் வலிமையோடு எமது உரிமைப்போராட்டத்திற்கான அடையாளப்போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது உதவிசெய்யாவிட்டாலும் உணர்வுகளை காயப்படுத்தாமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.இல்லையேல் இப்படியான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் வெளிப்படையாக பொதுவெளிகளில் பேசவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

“நன்றி”

-தமிழ்முரசம்-

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments