இந்திய மீனவர்களின் படகின்மீது மோதி ஒருவரை கொன்ற சிறிலங்கா கடற்படை!

You are currently viewing இந்திய மீனவர்களின் படகின்மீது மோதி ஒருவரை கொன்ற சிறிலங்கா கடற்படை!

இந்திய மீனவர்களின் இரண்டு படகுகள் நேற்று யாழ். பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்புக்குள் நுழைந்த சமயம் அதனை இலங்கைக் கடற்படையினர் விரட்ட முற்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் 3 இந்திய மீனவர்கள் இருந்தபோதும் இரு இந்திய மீனவர்களை மட்டுமே கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ராஜ்கீரன் ராசு என்ற இந்திய மீனவரே காணாமப்போயுள்ளார். இன்று அதிகாலை வரை அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர் மீட்கப்படாமையால் உயிராபத்து நிகழ்ந்திருக்குமா என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments