இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611உயர்வு!

You are currently viewing இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611உயர்வு!

இலங்கையை உலுக்கிய இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 213 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 626 குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்து 54 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 33 ஆயிரத்து 622 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

4 ஆயிரத்து 309 வீடுகள் முழுமையாகவும், 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply