ஜூன் மாதம் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் காயமடைந்ததாக ஈரானிய செய்தி நிறுவனமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இரகசிய நிலத்தடி இடமொன்றில் உயர் அதிகாரிகளைச் சந்தித்த போது, அவர் மீது ஆறு குண்டுகள் தாக்கியதாக அறிக்கை கூறுகின்றது.
இதனையடுத்து, அவசரகால வெளியேற்றத்தின் வழியாக தப்பிச் செல்லும்போது பெஷேஷ்கியன் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களின் இரகசிய சந்திப்பு இடத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக இப்போது கூறப்படுகின்றது.






