ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா கண்டனம் !

You are currently viewing ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா கண்டனம் !

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளை அடுத்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையிலும், இஸ்ரேல் நடத்திய புதிய ட்ரோன் தாக்குதலில் லெபனானில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, தெற்கு லெபனானின் காந்தாரா பகுதியில் இருந்த இஸ்ரேலியப் படையினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த போஃபோர்ட் கோட்டைக்கு அருகில் இருந்த துருப்புகள் மீது ட்ரோன்களை ஏவியதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய போர்நிறுத்தச் சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்கும் (ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்யும்) உள்நாட்டு அழுத்தங்கள் அதிகரித்து வருவது அந்த அமைப்பின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

அதேநேரம், அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் முறியடிக்கக் கூடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. மறுபுறம், பஹ்ரைன் நாட்டை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் ஜயானியுடன் தொலைபேசியில் உரையாடிய சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், பஹ்ரைனின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரியாத் முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து விவாதித்த இரு அமைச்சர்களும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைப் பேண கூட்டு முயற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்த ட்ரோன் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்மினல் 1 பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 63 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென வானில் இருந்து வந்த ட்ரோன் வெடிகுண்டு விமான நிலையத்தின் பயணிகள் கூடத்தில் வெடித்தது. அப்போது அங்கு நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply