ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை!

You are currently viewing ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வகுமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply