சிங்களப்பகுதியில் தமிழ் உணவக உரிமையார் பயங்கரவாதி என அச்சுறுத்தல்!

You are currently viewing சிங்களப்பகுதியில் தமிழ் உணவக உரிமையார் பயங்கரவாதி என அச்சுறுத்தல்!

வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உணவகமொன்றை நடத்திவருகின்றார்.

தனது உணவகத்தில் தொடர்ச்சியான இனரீதியான துஷ்பிரயோகங்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, அதனை விரைவில் மூடிவிட நேரிடும் என அறிவித்துள்ளார்.

இலங்கைப் போர் நடந்த காலத்தில் சிறுவயது அகதியாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய தாம், பல வருடங்களுக்குப் பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், தாய்நாட்டிற்கு பங்களிப்பு செய்யவும் திரும்பியதாக, அவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு உருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு நண்பருடன் சேர்ந்து, உணவு மற்றும் இசையின் மூலம் இலங்கை மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்தைக் கொண்டாடும் நோக்குடன் அவர் தனது உணவகத்தைத் திறந்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நேற்று அஹங்கமவில் உள்ள தனது உணவகத்தில், நான் இனரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மிரட்டப்பட்டேன், ஒரு மனிதன் பணம் கொடுக்க மறுத்தபோது என் தொண்டையை அறுப்பதாக மிரட்டினார். துரதிர்ஷ்டவசமாக, இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

அஹங்கமவில் உள்ள ஒரே ஒரு தமிழருக்குச் சொந்தமான வர்த்தகமாக இருப்பதால், நான் பலமுறை ‘தமிழீழ விடுதலைப் புலி’ மற்றும் ‘பயங்கரவாதி’ என்று அழைக்கப்பட்டுள்ளேன்.

”​தீபாவளியின் போது, தமிழ் இசையை இசைக்க வேண்டாம் என்றும், “யாழ்ப்பாணத்திற்கே திரும்பிச் செல்லுங்கள்” என்றும் தனக்குக் கூறப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.​

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஒரு DJ ஆக வலுவான பின்தொடர்பவரைக் கொண்ட இந்தத் தொழில்முனைவோர், தனக்கோ அல்லது தனது ஊழியர்களுக்கோ இனி பாதுகாப்பாக உணரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதைச் செய்வது என் மனதை உடைக்கிறது, ஆனால் நான் எனது குழுவைப் பாதுகாக்க ஒரு படி பின்வாங்க வேண்டும்,” எனவே எனது, உணவகம் விரைவில் மூடப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

16 வருடங்களாகப் போர் முடிவடைந்த பின்னரும், நாட்டில் நீடிக்கும் இனப் பிளவின் பிரதிபலிப்பாகவே இதைப் பலரும் பார்க்கின்றனர்.​

இவ்வாறான அனுபவங்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாய்நாடு திரும்புவதையோ அல்லது முதலீடு செய்வதையோ ஊக்கமிழக்கச் செய்யலாம் என கூறப்படுகின்றது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply