நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதியொருவரின் தாயான நந்தினி என்பவர், பிபிசி சிங்கள சேவையிடம் மிகவும் உருக்கமான முறையில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவனை நேற்றைய தினம் அவர்கள் அடித்துக் கொன்றுவிட்டனர்.
தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடூரமான வதையைக் கொடுத்துக் கொன்றுவிட்டனர்.
எனது மகனின் சடலம் இன்னும் நீர்கொழும்பு மருத்துவமனையிலேயே உள்ளது. எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனையாவது என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன்.
எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள். அந்தப் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். உயிருடன் இருக்கும் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படையுங்கள், நான் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் மேலும் உருக்கமாகத் தெரிவித்தார்.
நந்தினியின் உருக்கமான பாசப்போராட்டம் சிறைச்சாலை முன்பாக திரண்டிருந்த அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிட்டது.
இக்கலவரத்தில் 30 பேருக்கு மேலாக பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கும் உயிரிழப்புக்களுக்கும் ஜனாதிபதி அநுர குமாரவே பொறுப்பு என எதிர்தரப்புக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதேநேரம், ராஜபக்சக்களின் ஆதரவாளர்களும் இவ்விடயத்தை பயன்படுத்தி ஆளும் தரப்பு மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






