சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

You are currently viewing சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மயிலணி பகுதியில் வைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே மல்லாகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மயிலங்காடு பகுதியில் வைத்து 100 போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply