இனப்படுகொலையை சந்தித்த ஒரு சமூகமாக, காசாவில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீன மக்களுக்காக நேற்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பேரணி கவனம் பெற்றுள்ளது
குறித்த பேரணியில் தலைவர்கள், ஆளுமைகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என எண்ணற்ற தோழர்கள் கரம்கோர்த்து பாலிஸ்தீனத்தில் நடைபெறும் இன அழிப்பிற்கு எதிரான குரலையும், விடுதலைக்கான ஆதரவையும் உறுதிபட தெரிவித்தார்கள்.
மேலும் குறித்த பேரணியில் “வெல்லட்டும் தமிழீழம் ” “வெல்லட்டும் பாலஸ்தீனம்”ஆகிய கோசங்கள் இடிமுழக்கமாக முழங்கப்பட்டது .



















