டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே வெடிப்பு!

You are currently viewing டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே  வெடிப்பு!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே இன்று (7) காலை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயில் திங்கள்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறித்து அழிக்கப்பட்ட சிதைவுகள் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம்” என விவரித்துள்ளதுடன், அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவி வரும் ஏனைய செய்திகளை மறுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply