தாயக எழுச்சிப் பாடலை  தனது தளத்தில் பதிவிட்ட பாடகர் கைது!

You are currently viewing தாயக எழுச்சிப் பாடலை  தனது தளத்தில் பதிவிட்ட பாடகர் கைது!

தாயக எழுச்சிப் பாடலை  தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பாடகர் சாவகச்சேரி சிறீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைதானது அனுரா அரசின் கோர முகத்தை வெளிக்காட்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply