சிறீலங்கா அரசால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பினையும் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழைப்பினையும் மறைப்பதற்காக அனுரா அரசு தமிழர்களின் மீட்பர்போல் நாடகமாடி வருவது நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துவரும் ஏமாற்றுவேலை, எப்படி 70 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்ட சிறீலங்கா அரசுகள் தமிழ்மக்களை ஏமாற்றி தமிழின அழிப்பை மேற்கொண்டார்களோ, அதே மகாவம்ச மனநிலையைக் கொண்டவர்கள்கள்தான் அனுரா அரச தரப்பும் என்பதை நாம் எள்ளளவும் மறந்துவிடக்கூடாது.
ஆகவே எமது உரிமைக்காகவும் நீதிக்காகவும் நாம் நிமிர்ந்து நின்றால் மட்டுமே எமது இலக்கைத் தொடமுடியும் இல்லையேல் எம்மையும் அடிவருடி சிந்தனைக்குள் வீழ்த்தி இனத்தின் விடுதலைக்கான குரலையும் செயற்பாடுகளையும் ஒடுக்க முனைவார்கள் என்ற ஆபத்தினை உணர்ந்து நாம் விழிப்போடு இருப்போம்.







