தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி மற்றும் தட்டுமுனை பகுதிகளில் உள்ள முகாங்களில் தங்கியுள்ள 100 பேருக்கு இன்று (30.11.2025) இன்று இரவு உணவு வழங்கப்பட்டது.இந்த உதவித்திட்டமானது நோர்வே தமிழ்முரசம் வானொலியின் நிதிப்பங்களிப்போடு இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பங்களிப்பு செய்த நோர்வே தமிழ் மக்களுக்கு தாயக உறவுகள் தமது நன்றியையும் அன்பினையும் தெரிவித்துள்ளனர்











