இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் வீட்டின் அருகே பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது
பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் வீட்டின் அருகிலும் குண்டு வெடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது
பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.






