சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 300 பேரும், தாய்லாந்தில் 263 பேருமாக இரு நாடுகளிலும் இதுவரை 563 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலாக்கா நீரிணைப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி சென்யார் புயலாக வலுப்பெற்று இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது.
இதன் காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் பாரிய வௌ்ளமும் மண்சரிவும் ஏற்பட்டது.
அதன் விளைவாக வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சே மாகாணங்களில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 620 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 290 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.11 பில்லியன் டொலர் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஏற்பட பல வாரங்களாகுமென தெரிவிக்கப்படுகிறது





