மாவீரர்களை பெற்றெடுத்த மாமனிதனுக்கு புகழ்வணக்கம்!

You are currently viewing மாவீரர்களை பெற்றெடுத்த  மாமனிதனுக்கு புகழ்வணக்கம்!

போராட்டகாலங்களில் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஊடகத்தின் செயற்பாட்டுக்கூடாக விடுதலைப்போராட்டத்திற்கு பக்க பலமாக இயங்கிய புலிகளின்குரல் வானொலியின் பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியுமான தமிழன்பன் (ஜவான் ) மற்றும் தமிழீழ மருத்துவப்பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை மருத்துவர் திரு வண்ணன் மற்றும் வீரவேங்கை பரணி ஆகியோரின் தந்தையான கந்தையா நாகரத்தினம் அவர்கள் இன்று (29.01.2023 ) இயற்கை சாவடைந்துள்ளார். எமது தேச விடுதலைக்காக தன் பிள்ளைகளை உகந்தளித்த இந்த மாமனிதனுக்கு எமது வானொலியின் புகழ்வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சமாதான காலத்தில் நோர்வே வருகை தந்திருந்த தமிழன்பன் அவர்கள் புலிகளின் குரல் வானொலியின் கள அனுபவ பகிர்வினை தமிழ்முரசம் வானொலிப்பணியாளர்களோடு பகிர்ந்து கொண்டதோடு எமது ஊடகப்பணியினையும் நேரடியாக பார்வையிட்டு தனது வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments