அமெரிக்க அதிபர் Donald Trump, அமெரிக்கா–ஈரான் மோதல் முடிவுக்கு வருவதாகவும், இரு தரப்பும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் அருகில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, இதன் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த ஈரானுக்கெதிரான புதிய அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்பின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுதம் உருவாக்காததை உறுதி செய்யும் எனவும், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான “Strait of Hormuz” மீண்டும் முழுமையாக திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈரானின் அரசு செய்தி நிறுவனங்களும் ஒப்பந்தத்திற்கு சாதகமான சைகைகளை வெளிப்படுத்தியுள்ளன எனினும், ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வ இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை குறைந்ததுடன், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் வரை நிலைமை முழுமையாக உறுதியானதாகக் கருத முடியாது என்று அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
12.06.2026






