“அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” – ரஷ்யா 

You are currently viewing “அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” – ரஷ்யா 

ரஷ்யா தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது படைகளை உக்ரேனுக்குள் அனுப்பிய சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு, அங்குள்ள மோதல்கள் அணுவாயுதப் போராக விரிவடையும் என்ற மேற்கத்திய கவலையின் மத்தியில் இந்த கருத்து வந்தது. Tass செய்தி நிறுவனம் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

கடந்த மாதம் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் வைக்க அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு இணங்க, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பிப்ரவரி 28 அன்று அதன் அணுசக்தி ஏவுகணைப் படைகள் மற்றும் வடக்கு மற்றும் பசிபிக் கடற்படைகள் மேம்பட்ட போர் கடமையில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அணுசக்தி மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற நிலை, இப்போது சாத்தியக்கூறுகளின் எல்லைக்குள் திரும்பியுள்ளது” என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மார்ச் 14 அன்று கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments