அச்சுவேலி சந்தையிலும் கொரொனா!

You are currently viewing அச்சுவேலி சந்தையிலும் கொரொனா!

அச்சுவேலி சந்தைவியாபாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இன்றையதினம் அச்சுவேலி சந்தையில் பொதுமக்கள் வருகை குறைவடைந்துள்ளது.

நேற்றையதினம் சந்தை வியாபாரிகள் நால்வர் ஒருநாள் தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்றைய தினம் குறித்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள் பிசியார் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் அச்சுவேலி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

குறித்த நான்கு வியாபாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தையில் உள்ள கட்டிட தொகுதியில் ஒரே வரிசையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் குறித்த வியாபாரிகளுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள படஉள்ளதோடு அவர்களோடு நேரடியாக தொடர்பு பட்டவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள