அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவுடன் பேசவில்லை!

You are currently viewing அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவுடன் பேசவில்லை!

தேசிய பிரச்­சி­னைக்­கான அதி­காரப்பகிர்வு குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் போது கலந்துரையாடவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த வெளிவி­வ­கார அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்­திப்­புக்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தே இந்­தியத் தலை­வர்­க­ளு­டனான சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டதாக குறிப்பிட்டார். சந்திப்புக்கள் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தன என்றும் அவர் கூறினார்.

எனினும் இந்த பயணத்தின் போது, அதி­காரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்­ப­ட­வில்லை என்றும் தனது சந்­திப்­புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களுக்குட்பட்டதாகவே காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள