அன்பான மாவீரர் பெற்றோர்களே! உரித்துடையோர்களே! மக்களே!

You are currently viewing அன்பான மாவீரர் பெற்றோர்களே! உரித்துடையோர்களே! மக்களே!

எவ்வகையான இடர் வந்தாலும் மாவீரர்களைப் போற்றும் புனிதநாள் நினைவுகளை, தற்போதைய காலநிலமைக்கேற்ப சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகளனைத்தும் நீங்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர் பணிமனை ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தில், இம்முறை மாவீரர்களை நினைவுகூர்வதற்கு திட்டமிட்ட அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எத்தனையோ தடைகளைத் தாண்டி, எங்கள் மக்களின் சுதந்திர வாழ்விற்காக, எமது வீரமறவர்கள் எமது மண்ணை முத்தமிட்டார்களோ, அதே உத்வேகத்துடன் அவர்களின் நினைவெழுச்சிநாளான மாவீரர் நாளில் லெப். சங்கர் அவர்கள், வீரச்சாவடைந்த தாயகநேரம் மாலை 06.07 மணிக்கு சுடரேற்றி நினைவேந்த, நாம் உறுதியுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு எம் மாவீரச்செல்வங்களை வணங்கி உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மாவீரர் பணிமனை,

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

பகிர்ந்துகொள்ள