அமெரிக்க செல்வந்தரின் 140 கோடி ரூபா இணையம் மூலம் திருட்டு- 7 பேர் கைது!

You are currently viewing அமெரிக்க செல்வந்தரின் 140 கோடி ரூபா இணையம் மூலம் திருட்டு- 7 பேர் கைது!

அமெரிக்காவில் வசிக்கும் செல்வந்தர் ஒருவரின் வங்கிக் கணக்கை இணையம் மூலம் மோசடி செய்து 140 கோடி ரூபாவை இலங்கையில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இணைய திருட்டு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தமையை அடுத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது களவாடப்பட்ட பணத்தில், 90 கோடி ரூபா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 36 பேரை சிஐடியினர் தேடி வருகின்றனர்.

இதுவரையில், இலங்கைக்குள் இணையம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய திருட்டு இதுவாகும்.

பகிர்ந்துகொள்ள