அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்!

  • Post author:
You are currently viewing அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்!

ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து 4 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து பாக்தாத்தின் வடக்கே அல்-பாலாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க ராணுவ வீரர்களை குறி வைத்து 4 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடைபெற்றதாக ஏ.எப்.பி.(AFP) நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள