அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் அல்லது பிணையில் சரி விடுவிக்கவும் – கஜேந்திரன்!

You are currently viewing அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் அல்லது பிணையில் சரி விடுவிக்கவும் – கஜேந்திரன்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின்அபாய நிலைமையைக் கருத்தில்கொண்டு எதுவித நிபந்தனையற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று(13) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. தொற்றா நோயுள்ள கைதிகள் பலருக்கு இந்தக் கொரோனாத் தொற்று பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

அந்தவகையில் மிகவும் கொடிய சட்டமாகிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளில் பலர் இன்று நீரிழிவு நோய் உட்பட பல தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தனையற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் பிணையில் சரி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்

பகிர்ந்துகொள்ள