அரியாலையில் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவித்து STF படையினர் நால்வர் வைத்தியசாலையில்?

You are currently viewing அரியாலையில் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவித்து STF படையினர் நால்வர் வைத்தியசாலையில்?

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை தடுத்துநிறுத்தியபோது அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மணல் ஏற்றப்பயன்படுத்தும் சவள்களால் தாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக படைத்தரப்புத் தெரிவிக்கின்றது.

இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக சிறீலங்கா காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, அதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments