அரியாலை பூம்புகார் கடற்கரையோரத்தில் கஞ்சா மீட்பு!

You are currently viewing அரியாலை பூம்புகார் கடற்கரையோரத்தில் கஞ்சா மீட்பு!

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மூன்று மூடைகளாக்கப்பட்ட நிலையில் 80 கிலோவிற்கும் மேற்பட்ட எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

பூம்புகார் கடற்கரையோரத்தில் இருந்து குறித்த கஞ்சாப் மூடைகள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பில் சிறீலங்கா காவற்துறை விசேட அதிரடிப் படையினர் யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments