அருகருகே வரும் சனி, வியாழன் கோள்கள்! 800 வருடங்களின் பின் அதிசயம்!!

You are currently viewing அருகருகே வரும் சனி, வியாழன் கோள்கள்! 800 வருடங்களின் பின் அதிசயம்!!

சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் அருகருகே வருவதால், இவையிரண்டும் ஒரே புள்ளியாக வான்வெளில் தெரியவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21.12.2020 அன்று நிகழவிருக்கும் இவ்வதிசயம், கடந்த 800 வருடங்களில் நிகழ்ந்திருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

வான்வெளியில் தமக்கிடையே சுமார் 700 மில்லியன் மைல்கள் இடைவெளியை கொண்டுள்ள இவ்விரு கோள்களும் தங்கள் தங்கள் பாதைகளில் ஒரே நேர்கோட்டில் வருவதால் இரண்டும் ஒரே புள்ளியாக தெரியக்கூடிய அபூர்வமான வாய்ப்பு, 21.12.2020 அன்று நிகழவிருப்பதாக வானவெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள