அழகிரி ஆதங்கம் : வெறும் 24,000 விரைவுச் சோதனைக் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா!

  • Post author:
You are currently viewing அழகிரி ஆதங்கம் : வெறும் 24,000 விரைவுச் சோதனைக் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா!

கொரோனாவை எதிர்கொள்ளும் விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மோடி தமிழகத்தை ஏமாற்றிவிட்டார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 5 லட்சங்களில் வெறும் 24,000 விரைவுச் சோதனைக் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முதலமைச்சர் ஏன் இன்னும் மெளனமாக இருக்கின்றார் என்றும் கேட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள