ஆட்களை தள்ளிவிட்டு கொள்ளையிடும் கும்பல் கைது!

You are currently viewing ஆட்களை தள்ளிவிட்டு கொள்ளையிடும் கும்பல் கைது!

யாழில் பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடைய நால்வர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம், சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய இடங்களில் வீதிகளில் செல்வோரை தள்ளி விழுத்தி காயப்படுத்தி நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த நால்வரே இன்றைய தினம் (23) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 பவுண் நகை, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள