ஆப்கானில் அனைவருக்கும் பொதுமன்னிப்பு – தலிபான்கள்!

You are currently viewing ஆப்கானில் அனைவருக்கும் பொதுமன்னிப்பு – தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொதுமன்னிப்பளிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையுடன் வழக்கமான பணிகளுக்குத் திரும்புமாறும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்குமாறும் தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக தலைநகர் காபூலில் உள்ள அரச பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கும் திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காபூலில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது. எனவே, அனைவரையும் இயல்பு வாழ்வுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்கிறோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments