ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் பலி!

You are currently viewing ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – வாழைச்சேனை வாகநேரியில் 25 ஆம் திகதி இரவு ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற்று இறுதி நாளாகிய 25 ஆம் திகதி இரவு தேவதிகளிளை மந்திரித்து கட்டுதல் தொடர்பான முரன்பாட்டின் காரணமாக இரு குழுக்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிறீலங்கா காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments