இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கும் “கொரோனா” தொற்று!

You are currently viewing இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கும் “கொரோனா” தொற்று!

இங்கிலாந்தில் பிறந்த குழந்தையொன்றுக்கு “கொரோனா” தொற்று இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் தாயாருக்கு சுவாசப்பை அழற்சி இருந்ததாக தெரிவிக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள், தாயிடமிருந்தே குழந்தைக்கும் “கொரோனா” தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தின் “Enfield, North Middlesex” என்ற இடத்திலுள்ள வைத்தியசாலையிலேயே மேற்படி சம்பவம் நடந்துள்ளது. தாயின் வயிற்றிலிருந்தபோதே குலந்தைக்கு தொற்று ஏற்பட்டதா அல்லது, பிறப்பின்போது தொற்று ஏற்ப்பட்டதாவென அறிய முடியவில்லையென தெரிவிக்கும் வைத்தியர்கள், இப்போது தாயையும், குழந்தையையும் தனித்தனியே வைத்து சிகிச்சை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள