இந்தியாவில் 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது கொரோனா தொற்று!

You are currently viewing இந்தியாவில் 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது கொரோனா தொற்று!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இன்று காலை 9 மணி வரையான கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று 442 பேர் உயிரிழந்தனர் என இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 168,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 9,55,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,868-ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments