இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் துடுப்பாட்டம் ; ஆட்டத்தின் நடுவே மைதானத்திற்குள் புகுந்த நாய்.

  • Post author:
You are currently viewing இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் துடுப்பாட்டம் ; ஆட்டத்தின் நடுவே மைதானத்திற்குள் புகுந்த நாய்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

நாணய சுழட்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தததையடுத்து இந்திய அணி முதலாவதாக துடுப்பெடுத் தாட்டத்தை செய்து வருகிறது.
போட்டியின் 26 ஆவது பந்து பரிமாற்றத்தின்போது திடீரென எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது.

முதலில் கோட்டுக்கு வெளியே சுற்றித்திரிந்த அந்த நாய் பின்னர் மைதானத்திற்கு உள்ளே புகுந்து ஓடத் தொடங்கியது. இதனைக் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.

பின்னர் ஒருவழியாக அந்த நாய் அங்கிருந்த பார்வையாளர் பகுதி வாசல் வழியாக ஓடி மறைந்தது. இதனால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது.

மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை மீறி, நாய் ஒன்று போட்டியின் நடுவே உள்ளே புகுந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள