இராணுவம், காவற்துறையால் தாக்கப்பட்ட இளைஞன் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

You are currently viewing இராணுவம், காவற்துறையால் தாக்கப்பட்ட இளைஞன் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிறீலங்கா காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவற்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து மானிப்பாயில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் கடமையில் இருந்த போது, தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, இராணுவத்தினரும் பொலிஸாரும் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட போது, வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த சிறீலங்கா காவற்துறையினர், மானிப்பாய் சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் நேற்று வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments