இலங்கைக்கு உதவும் விடயத்தில் அமெரிக்கா நேர்மையை வெளிப்படுத்தவேண்டும்!சீனா

You are currently viewing இலங்கைக்கு உதவும் விடயத்தில் அமெரிக்கா நேர்மையை வெளிப்படுத்தவேண்டும்!சீனா

இலங்கைக்கு உதவும் விடயத்தில் அமெரிக்கா நேர்மையை வெளிப்படுத்தவேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்

அமெரிக்க தெரிவித்துள்ள கருத்து உண்மையை வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள சீன பேச்சாளர் கடன் பேண்தகுதன்மையை இலங்கை தொடர்ந்து பேணுவதற்காக சீனாவின் எக்சிம் வங்கி கடிதமொன்றை இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைசாதகமாக பதிலளித்துள்ளதுடன் நன்றி தெரிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பை நோக்கி விரல்களை நீட்டுவதற்கு பதில் அமெரிக்கா நேர்மையை வெளிப்படுத்தி இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நட்புறவு மிக்க நேசநாடு நெருங்கிய நண்பன் என்ற அடிப்படையில் சீனா இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை நெருக்கமாக அவதானித்து வருவதுடன் தன்னால் முடிந்த அளவிற்கு இலங்கைக்கு சமூக பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது.

சீனாவிற்கான இலங்கையின் கடன்களை பொறுத்தவரை உரிய தீர்வை காண்பதற்கு உரிய நிறுவனங்கள் இலங்கை தரப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்கு சீனா தயாராக உள்ளது என மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

சீன உரிய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது இலங்கை தற்போதைய நிலையை சமாளிப்பதற்கும் அதன் கடன் சுமையை குறைப்பதற்கும்சாதகமான உதவிகளை வழங்கிவருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments