இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சீனர்கள்!

You are currently viewing இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சீனர்கள்!

ருமணம் செய்து இலங்கைப் பெண்களை சீனாவுக்கு அழைத்துச் செல்லும் சீனர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருவதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைத்திட்டங்களுக்காக இலங்கைவரும் சீனர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அழகிய பெண்களை இலக்குவைத்து அவர்களை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று அங்கு குறித்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்திவருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்காக அழைத்துச் செல்ல முயற்சித்தபோது கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாகவே, வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments