இலங்கையின் நிலவரம் – புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

You are currently viewing இலங்கையின் நிலவரம் – புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.

சிறீலங்கா நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை மக்களவையில் விவாதிப்பதற்கு பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழுவானது தமது விருப்பத்தின் அடிப்படையில் விவாதத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கு வழங்கும்.

அந்தவகையிலேயே தற்போது இலங்கையின் நிலவரம் குறித்து விவாதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments