இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சுமார் 9 கிலோ தங்கம் இந்தியாவில் சிக்கியது!

You are currently viewing இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சுமார் 9 கிலோ தங்கம் இந்தியாவில் சிக்கியது!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 9 கிலோ தங்கம் இந்திய கடலோர காவல் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகில் இருந்த மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த நபரை சோதனை செய்த போது அவரது உடம்பில் மறைத்து வைத்திருந்த சுமார் பல இலட்சம் மதிப்பிலான

 9 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் அவருடன் இருந்த நால்வர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்குது.

பகிர்ந்துகொள்ள