இலங்கையில் இன்று நால்வருக்கு தொற்று தொற்று 242 ஆக உயர்ந்தது!

You are currently viewing இலங்கையில் இன்று நால்வருக்கு தொற்று தொற்று 242 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, 70 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள