இலங்கையில் கொரோனா கோரத் தாண்டவம்; ஒரே நாளில் 160 பேரை பலியெடுத்தது!

You are currently viewing இலங்கையில் கொரோனா கோரத் தாண்டவம்; ஒரே நாளில் 160 பேரை பலியெடுத்தது!

இலங்கையில் 160 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

நாட்டில் ஒரு நாளில் பதிவான அதிக மரணங்களின் முன்னைய எண்ணிக்கையைக் கடந்து நேற்று அதிக மரணங்கள் பதிவாகின.

இவற்றுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 87 ஆண்களும் 73 பெண்களும் அடங்குகின்றனர். இறந்த 160 பேரில் 124 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரையான கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கையில் 1350 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments