இலங்கையில் தொடரும் பேரவலம்; ஒரே நாளில் 111 பேர் பலியான அவலம்!

You are currently viewing இலங்கையில் தொடரும் பேரவலம்; ஒரே நாளில் 111 பேர் பலியான அவலம்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான 111 பேர் ஒரே நாளில் இலங்கையில் பலியான அவலம் நேற்று (08)இடம்பெற்றுள்ளது.

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்றைய தினம் (ஓகஸ்ட்-08) மேலும் 111 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஓகஸ்ட்-04 முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக 90ஐ கடந்த கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் நேற்று நூறைக் கடந்து 111 மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments