இலங்கை சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் பேர் விடுவிப்பு!

You are currently viewing இலங்கை சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் பேர் விடுவிப்பு!

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி அந்தோணிராயப்பு, கிறிஸ்டோபர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.

அவர்களது 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை சிறையில் இருந்த 15 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களையும் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் வருகிற 25-ந்தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்கள் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments