இலங்கை திரும்பினார் கோட்டாபய!

You are currently viewing இலங்கை திரும்பினார் கோட்டாபய!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கை நேரப்படி இன்றிரவு 23:45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக இலங்கை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மக்களின் போராட்டங்களையும், அழுத்தங்களையும் அடுத்து, இலங்கையை விட்டு மாலைதீவு சென்ற கோட்டாபாயவும், அவரது பாரியாரும், மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், சிங்கப்பூர் அரசின் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாத சூழ்நிலையில், தாய்லாந்து சென்ற கோட்டாபய தம்பதிக்கு, மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்து அரசு கலவரையறையற்ற தங்குமிட அனுமதியை வழங்கியிருந்தது.

எனினும், இன்று இலங்கை திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு, முன்னாள் அதிபர்களுக்குரிய பாதுகாப்பும், அரச சலுகைகளும் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு திரும்பியபின் மீண்டும் அரசியல் செயற்படுகளில் கோட்டாபய இறங்குவாரென தகவல்கள் முன்னதாக வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments