ஈராக்கிலுள்ள அனைத்து அன்னியப்படைகளும் வெளியேறவேண்டும்! ஈரானிய நாடாளுமன்றம் முடிவு!!

You are currently viewing ஈராக்கிலுள்ள அனைத்து அன்னியப்படைகளும் வெளியேறவேண்டும்! ஈரானிய நாடாளுமன்றம் முடிவு!!

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டுப்படைகளும்ஈராக்கிலிருந்துவெளியேறுவதையே தாம் விரும்புவதாகஈராக்கிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமைஅமெரிக்க அதிபர் “டொனால்ட் ட்ரம்ப்” பின் விசேட உத்தரவின் பேரில்கொல்லப்பட்டஈரானிய பிரதான இராணுவத்தளபதியான “காஸிம் சுலைமானி” யின்இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட ஈராக்கிய பிரதமர் “அதீல் அப்துல் மஹ்தி” இத்தகவலைபகிரங்கப்படுத்தியுள்ளார்.

காஸிம் சுலைமானி” யின் படுகொலையை தொடர்ந்து கடும் சீற்றமடைந்துள்ள ஈரான்இப்படுகொலைக்கு அமெரிக்கா அதியுயர் விலைகளை கொடுக்க வேண்டும் எனவும்அமெரிக்கஇலக்குகள்மீது பழிவாங்கல் தாக்குதல்களை ஈரான் நடத்தும் என்றும் தெரிவித்திருந்ததுஇந்தநிலையில்ஈரான் அமெரிக்க நிலைகள்மீது தாக்குதல்களை தொடுக்கும் பட்சத்தில்ஈரானியஇலக்குகள்மீதும் பதில்தாக்குதல்கள் நடத்தப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில்ஈராக்கிய பிரதமரின் இவ்வறிவிப்பு இன்று 05.01.2020 ஞாயிறு வெளியாகியுள்ளதுஈராக்கில் சுமார் 5000 அமெரிக்கப்படைகள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில்ஈராக்கின் உத்தரவை அமெரிக்கா மதித்துஅங்கிருந்து வெளியேறுமா என்பது கேள்விக்குறியாகஉள்ளது.

ஈரானிய இராணுவத்தளபதியை அமெரிக்கா படுகொலை செய்தமையானதுமத்தியகிழக்கில்தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும்இதற்கான பொறுப்பைஅமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ள ஈராக்கிய பிரதமர்கோபமடைந்ததுள்ள ஈரான்ஈராக்கிலுள்ள அமெரிக்கநிலைகள்மீது தாக்குதல் தொடுக்கும்பட்சத்தில்அது ஈராக்குக்கே மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவோடு போரொன்றை தான் எப்போதுமே விரும்பியிருக்கவில்லைஎனத்தெரிவித்திருக்கும் ஈரான்எனினும்தமது இராணுவத்தளபதியை படுகொலைசெய்ததன்மூலம் வேண்டாத போர் ஒன்றிற்கு அமெரிக்காவே தன்னை இழுத்து வந்துவிட்டதாகவும்தமது பதில்தாக்குதல்களுக்கு அமெரிக்க முகம் கொடுத்தேயாகவேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில்ஈரானோடு வலிந்த போரொன்றுக்குபெருமுயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்காஅந்த முயற்சிகள்பலனளிக்காததால்ஈரானை சீண்டும் விதத்தில் ஈரானியஇராணுவத்தளபதியை கடந்த 03.01.2020 வெள்ளியன்று படுகொலைசெய்திருந்ததுஅமெரிக்காவின் இச்செயல்அமெரிக்காவிலும்சர்வதேசத்திலும் கடும் கண்டனங்களை தோற்றுவித்திருப்பதும்குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள