ஈரானில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு ;கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing ஈரானில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு ;கொரோனா வைரஸ்!

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. 

வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது. ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது.

இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி உள்ளார்.  அந்நாட்டில் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.

பகிர்ந்துகொள்ள