ஈரானில் மேலும் 3 பேர் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing ஈரானில் மேலும் 3 பேர் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான். ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில்  ஈரானில் இதுவரை கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து அந்த நாட்டு அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன்படி அங்குள்ள 14 மாகாணங்களில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டு உள்ளன.

பகிர்ந்துகொள்ள