ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!!

You are currently viewing ஈருருளிப் பயணம்  ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை  வந்தடைந்தது!!

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி 04/09/2020 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று (20/09/2020) Lausanne மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக 1300 km தூரத்தை பல இயற்கை இடர்களுக்கு மத்தியில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ) வந்தடைந்தது.

நாளை திங்கட் கிழமை 21/09/2020 பிற்பகல் 2 மணிக்கு தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பன்னாட்டு சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப் பயணமும் இணையவுள்ளது. சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது விடுதலையை வேகப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!! 1
ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!! 2
ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!! 3
ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!! 4
ஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது!! 5

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள